“ இந்தியாவில் மோடி எப்படியோ அதுபோலவே இலங்கையில் ஜனாதிபதி ரணில். இவ்விருவருமே தேர்தல்களில் நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்வார்கள்.” – என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ சவாலான சூழ்நிலையிலேயே இந்நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார். அவர் இதற்கு முன்னர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருந்தால் இந்நாடு சிறந்த நிலையில் இருந்திருக்கும். அதனை அவர் தனது செயல்மூலம் நிரூபித்துள்ளார்.
இந்தியாவில் 2ஆம் கட்ட வாக்குபதிவு இடம்பெற்றுவருகின்றது. அத்தேர்தலில் பிரதமர் மோடி நிச்சயம் வெற்றிபெறுவார். அவர் மீண்டும் பிரதமர் ஆவார். அவர் இந்தியாவை நேசிக்கின்றார். இந்தியாவில் மோடிபோல்தான் இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டுவருகின்றார். அவர் நிச்சயம் ஜனாதிபதியாக வேண்டும்.” – என்றார்.