இந்தியா-ரஷ்யா உறவுகளை ஏன் தகர்க்க முடியாது?

சுதந்திரம் பெற்றதிலிருந்து, ரஷ்யா இந்தியாவுக்கு உறுதியான மற்றும் விசுவாசமான நண்பராக இருந்து வருகிறது.

இந்தியாவின் திறனை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்ட ரஷ்யாவும் அதன் தலைவர்களும் இந்தியாவையும் அதன் மக்களையும் எப்போதும் உயர்வாகக் கருதுகின்றனர் மற்றும் இயற்கையான பரஸ்பர நன்மை பயக்கும் உறவு பல தசாப்தங்களாக நீடித்தது.

அண்மையில், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் வெடித்ததில் இருந்து டெல்லி-மாஸ்கோ உறவுகள் தேவையற்ற ஊடக விமர்சனத்துக்கும் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி எப்போதும் அமைதி, மக்கள் சார்பான நிலையைப் பேணி வருகிறது. இது இருந்தபோதிலும், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்து பலர் கேள்விகளை எழுப்பியுள்ளதோடு, இன்னும் சிலர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் இணையுமாறு இந்தியாவைக் கேட்டுள்ளனர்.

இந்தியாவும் ரஷ்யாவும் ஒரு தனித்துவமான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன, இது இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இல்லாத பிற நாடுகளால் கட்டளையிடப்படக்கூடியதாக இருக்கக்கூடாது. இந்திய – ரஷ்ய இராஜதந்திர உறவுகள் காலத்தால் சோதிக்கப்பட்டவை மற்றும் பொருளாதார ரீதியாக கூட்டுறவு கொண்டவை.

இந்த உறவு இரு நாடுகளுக்கும் நன்மைகளை வழங்குவதோடு இந்திய மக்களுக்கு ஆதரவாக நிற்கும் பழைய நண்பருடன் புது டெல்லி ஒருபோதும் உறவை முறித்துக் கொள்ளாது.

இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் மற்றும் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை முந்தி முதல் மூன்று உலகப் பொருளாதாரமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. (S&P and Morgan Stanley கணிப்புகளின்படி)

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பாக பலனளித்துள்ளன. மேலும் அவை வரும் ஆண்டுகளில் பொருளாதாரத்தை மேல்நோக்கிக் கொண்டு செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மீண்டும் திறக்கப்பட்ட உலகில் உள்ள தேவையின் அதிகரிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்கும்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் அதிக பணவீக்கத்தால் உந்தப்பட்ட வீழ்ச்சியின் சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கும் போது, இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவின் அமைதிக்கு ஆதரவான, உலக விவகாரங்களுக்கான உரையாடலுக்கு ஆதரவான அணுகுமுறையே அதன் பொருளாதாரம் மற்றும் அவரது மக்களுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

அப்படியென்றால், மேற்குலகின் ரஷ்ய கண்டனத்தையும் தனிமைப்படுத்தலையும் இந்தியா ஏன் நகலெடுக்க வேண்டும்?

”போர் நடக்கக்கூடாது. சமாதானம் இருக்க வேண்டும், ஐ.நா. சாசனம் பின்பற்றப்பட வேண்டும் என்ற காரணத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம், அதனால் உரையாடல் மற்றும் இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், அவ்வாறு கூறும்போது, அவற்றை வெறும் கொள்கையாக மட்டும் வெளிப்படுத்தவில்லை” என்கிறார் முன்னாள் இந்திய தூதரான அனில் திரிகுனாயத்.

ஒரு தொழில்மயமான இந்தியாவிற்கான ஒரு பகுத்தறிவு அணுகுமுறை, அதன் வளர்ச்சி வேகத்தை பாதிக்கக்கூடிய எந்தவிதமான கட்டுப்பாடற்ற நிலைகளையும் தவிர்க்க வேண்டும்.

தொழில்நுட்பத் தடையாக இருந்தாலும் சரி, வர்த்தகத் தடையாக இருந்தாலும் சரி, ராஜதந்திரத் தடையாக இருந்தாலும் சரி, மோதல்களைத் தவிர்ப்பதில் இந்தியா புத்திசாலித்தனமாக இருக்கும்.

இந்திய வெளியுறவுக் கொள்கை தனது சொந்த மக்களின் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது, மற்றவர்கள் விரும்புவது அல்லது கட்டளையிட முயற்சிப்பதன் மூலம் அல்ல. எந்தவொரு தனிப்பட்ட சக்தியினாலும் அல்லது எந்தவொரு குழுவினாலும் உலகை துருவப்படுத்த முயற்சிக்கப்படும் போதெல்லாம் இந்தியா பக்கசார்பை தவிர்த்து வருகிறது.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், இந்தியா எப்போதுமே நடுநிலை மற்றும் அமைதிக்கு ஆதரவான நாடாக இருந்து வருகிறது என்பது புலனாகிறது. 1961 இல் அணிசேரா இயக்கத்தின் இணை நிறுவனராக இருந்து, இன்று வரை, இந்தியா, மீண்டும் மீண்டும், தான் அமைதியை விரும்புவதாகவும், எப்போதும் அமைதியை ஊக்குவிப்பதாகவும், பின்தொடர்வதாகவும் கூறுகிறது.

இந்தியாவின் யதார்த்தவாத தலைமை, அதன் நீடித்த பொருளாதார முயற்சிகள் தான், குறைந்த வருமானம் உள்ள நாட்டிலிருந்து நடுத்தர வருமானம் பெறும் நாட்டிற்கு தன்னை உயர்த்தும் என்பதை அறிந்திருக்கிறது.

உலக வங்கியின் கூற்றுப்படி, 2022-2023 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான ஜிடிபி 6.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்பது இந்தத் தத்துவத்தின் விளைவாகவே தவிர, கண்மூடித்தனமாகத் தேர்ந்தெடுக்கும் பக்கசார்பின்படியல்ல. (ஆதாரம்: உலக வங்கி)

அரசியலை விட தனது மக்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன் என்றும் புதுடெல்லி தெளிவுபடுத்தியுள்ளது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியானது ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் கிடைக்கும் எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்டது. இதை வேறு எந்த வகையிலும் விளக்கக் கூடாது.

“எங்களைப் பொறுத்தவரை, ரஷ்யா ஒரு நிலையான, நீடித்த பங்காளியாக இருந்து வருகிறது, பல தசாப்தங்களாக எங்கள் உறவின் எந்தவொரு புறநிலை மதிப்பீடும் உண்மையில் அது நம் இரு நாடுகளுக்கும் மிகச் சிறப்பாகச் சேவை செய்துள்ளது என்பதை உறுதிப்படுத்துவது எங்கள் அடிப்படைக் கடமையாகும். இந்திய நுகர்வோர் சர்வதேச சந்தையில் மிகவும் சாதகமான விதிமுறைகளில் சிறந்த அணுகலைப் பெற்றுள்ளது” என்று சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறினார்.

பல ஆண்டுகளாக, இந்தியாவிற்கு பொருளாதார, இராணுவ, இராஜதந்திர தேவைகள் உள்ளன, இவற்றை ரஷ்யா எப்போதும் கருத்தில் கொண்டு பதிலளித்துள்ளது. இந்தியாவின் பெட்ரோலால் இயக்கப்படும் பொருளாதாரம் அதன் பொருளாதாரத்தைத் தக்கவைக்க குறைந்த விலையில் எண்ணெய் தேவைப்படும்போது, மாஸ்கோ டெல்லிக்கு சிறந்த பங்காளியாக இருந்தது.

அவர்களின் காலத்தால் சோதிக்கப்பட்ட நட்பு மற்றும் எப்போதும் விரிவடையும் நட்புறவாகும். இது இருநாட்டுக்கும் பொருளாதார மற்றும் கலாச்சார நன்மைகளை வழங்குகிறது. மேற்கத்திய உலகமும், குறிப்பாக அவர்களின் ஊடகங்களும், இந்தியா-ரஷ்யா இருதரப்பு உறவின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டும், இது ஒத்துழைப்பால் செழித்து வளருமே தவிர சதித்திட்டங்களால் அல்ல.
இந்தியா பொருளாதார வல்லரசாகவும், இராஜதந்திர பாரபட்சமாகவும் வளர்ந்து வருவதால் இந்தியா-ரஷ்யா உறவுகள் விமர்சிக்கப்படுகின்றன என்று பலர் கூறுகிறார்கள்.

இந்தியாவின் முதல் முன்னுரிமை எப்போதும் தனது குடிமக்கள் மற்றும் அவர்களின் நலன்களைக் கவனிப்பதாகும். இந்தியாவின் அமைதி சார்பு, மக்கள் சார்பு, இராஜதந்திர சார்பு அணுகுமுறையே பிராண்ட் இந்தியாவை பொருளாதார ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் புதிய உயரங்களை நோக்கி தொடர்ந்து வழிநடத்தும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles