சுற்றுலா விசாவில் வருகைதந்த இந்திய நாட்டை சேர்ந்த ஜோதிடர்கள் இருவர் நேற்று ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜெயராம் டொஸ்க்கி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து இவர்களை 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இந்திய ஹைதராபாத் பிராந்தியத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் 2 பேரும் ஹட்டன் நகரின் பேருந்து தரிப்பிட பகுதியில் வியாபார ஸ்தலம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு ஜோதிட நிலையம் வைத்திருந்ததாகவும் அவர்களின் விசா முடிவுற்றபோதும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமையினால் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்