இந்திய தூதுவருடன் முற்போக்கு கூட்டணி அவசர சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (12) கொழும்பு 7இல் அமைந்துள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்றது.

முற்போக்கு கூட்டணியின் சார்பில் தலைவர் மனோ கணேசன்,  பிரதித் தலைவர்களான பழனிதிகாம்பரம், வே. இராதாகிருஸ்ணன், உப தலைவர்களான வேலுகுமார், அரவிந்தகுமார், உதயகுமார் ஆகியொர் கலந்துகொண்டனர். செயலாளர் சந்திராசாப்டரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் ஜெகப், அரசியல் துறை பொறுப்பாளர் கவுன்சிலர் திருமதி பானுபிரகாஸ் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மலையகத்துக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உட்பட சமகால விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles