இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு அவசியம்!

நாட்டில் பிரதான பிரச்சினையாக உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு தொடர்பில் ஆட்சியாளர்கள் திறந்த மனதுடன் செயற்பட வேண்டும் – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பேராயர் இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் சம்பந்தன் வெளிப்படைதன்மையுடன் செயற்பட்டவர். 30 வருட கால போரும், அதன் பின்னரான காலப்பகுதியும் துயர்மிக்க காலப்பகுதியாக இருந்தது. எனினும், வெளிப்படை தன்மையுடன் செயல்படும் இயல்பு சம்பந்தனிடம் காணப்பட்டது.

பிரதான பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். தீர்வை நோக்கி பயணிப்பதற்குரிய தைரியம் எமது அரசியல் தலைமைகளுக்கு கிட்ட வேண்டும்.

எமது நாட்டில் தமிழ் மற்றும் சிங்கள இனங்கள் சகோதரத்துவத்துடனும், சமாதானத்துடனும் வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.

நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றும் அதேவேளை சமூக ரிதியிலும் முன்னேற்ற வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கு தொடர்பில் வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறு அரசு செய்யும் என நம்புகின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles