இன்றும் மழை பெய்யும் – சீரற்ற காலநிலையால் 43,890 குடும்பங்கள் பாதிப்பு

சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (09) 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் மேற்படி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் 1,095வீடுகள் பகுதியளவும், 21 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

Related Articles

Latest Articles