மிக முக்கிய தீர்மானங்களை எடுக்கும் அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிக்கான தீர்வுகள், புதிய ஆண்டின் அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகள் கட்டமைப்பில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளன.
அதேபோல எரிபொருள் விலை உயர்வு சம்பந்தமாகவும் இதன்போது முடிவெடுக்கப்படலாம் என தெரியவருகின்றது.
