நாட்டில் மேலும் 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. நாட்டில் இன்று மாத்திரம் 755 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 28 ஆயிரத்து 379 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










