நாட்டில் இன்று மாத்திரம் 783 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 426 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
