இன்று மாலை தீர்க்கமான சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று மாலை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்கமாறு பஸில் ராஜபக்சவிடம் ரணில் கோரியுள்ளார். எனினும், மொட்டு கட்சியின் நிலைப்பாட்டை அவர் உறுதியாக தெரிவிக்கவில்லை.

இருவருக்கும் இடையில் நேற்று மாலையும் சந்திப்பொன்று நடைபெற்றது.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கப்பெறுமா அல்லது இல்லையா என்பது இன்றைய கூட்டத்தின் பின்னர் தெரியவரும் என அறியமுடிகின்றது.

Related Articles

Latest Articles