ஹங்குராங்கெத்தவிலிருந்து – அதிகாரிகம வழியாக மலுல்ல பயணித்துக்கொண்டிருந்த இபோச பஸ்ஸொன்று இன்று விபத்துக்குள்ளானது.
கடைமீது பஸ் மோதியில் குறித்த கடை சேதமடைந்துள்ளது. பிறகு வீடொன்றுக்கு அருகில் பஸ் கவிழ்ந்துள்ளது. இதனால் வீட்டின் கூரை சேதமடைந்துள்ளது. வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவும் சேதமடைந்துள்ளது.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பஸ் விபத்துக்குள்ளானபோது 20 பயணிகள் இருந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் ஹங்குராங்கெத்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,