கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை இரத்தினபுரி மாவட்டத்தில் 993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கண்டி மாவட்டத்தில் நேற்று 7 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2ஆவது அலைமூலம் மேற்படி மாவட்டத்தில் ஆயிரத்து 987 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.











