இரவும், பகலும் பாதியாக பிரிந்த பூமியின்புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டு அசத்தியுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ESA) தனது சமூக வலைதள பக்கத்திலேயே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
செயற்கைக்கோள் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்ட பதிவில்,
“குளிர்காலம் வருகிறது… சூரியன் பூமத்திய ரேகையைக் கடந்ததால், வடக்கு அரைக்கோளத்தில் இலையுதிர் உத்தராயணத்தைக்(Autumn Equinox) குறிக்கும் வகையில் இரவும், பகலும் பாதியாக பிரிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Winter is coming ❄️
Day and night are split in half today, as the Sun crossed the celestial equator in the sky at 07:50 BST/08:50 CEST marking the autumn equinox in the Northern Hemisphere.
This #Meteosat image was taken at 09:00 BST/10:00 CEST this morning (pic: EUMETSAT) pic.twitter.com/t7oUI36ai4
— ESA (@esa) September 23, 2023