காலி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளனர்.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த முதலாம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களே இவ்வாறு தப்பியோடியுள்ளனர்.
26 மற்றும் 33 வயதுகளுடைய இரு சந்தேக நபர்களே இவ்வாறு தப்பியோடியுள்ளனர்.