இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நாட்டில் முழுமையாக ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்குமாறு அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு செய்வதன் ஊடாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும், எனவே இது தொடர்பில் அரசு சாதகமான முறையில் பரீசிலிக்க வேண்டும் எனவும் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.










