2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு நோர்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் Jon Fosse தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டாக்ஹோமில் உள்ள Swedish Academy நடப்பாண்டிற்கான நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது.
ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே நாட்டவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இலக்கியப் பரிசு பெற்ற Jon Fosse, Minimalism என்று அழைக்கப்படும் ஒரு மிகச்சிறந்த பாணியில் குறுகிய நாவல்களை எழுதியுள்ளார்.
அவர் எழுதிய புதிய நாடகம் மற்றும் உரைநடைக்காக, நோபல் பரிசு பெற தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசானது ஒரு மில்லியன் அமெரிக்க டாலா், சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கமாகும்.










