இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜி.எல்.பீரிஸை சந்தித்தார்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே இன்று பதில் நிதியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை சந்தித்துள்ளார்.

கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு தொடர்பிலும், வர்த்தக நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான பல விடயங்கள் மற்றும் அண்மையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் பெறுபேறுகள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles