இந்திய பெருங்கடலில் வடக்கு சுமத்ரா கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அபாயம் ஏதும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
” இலங்கையில் உள்ள கடலோரப்பகுதிகள் பாதுகாப்பாக உள்ளது.” – எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சுமத்ரா தீவுகளை சுற்றியுள்ள கடலில் இன்று காலை 10.49 மணியளவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து தமது திணைக்களம் விடுக்கும் அறிவிப்புகள் தொடர்பில் கரையோகப் பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே இலங்கைக்கு சுனாமி அபாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.











