இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து வருகைதந்து, கொரோனா தடுப்பு முகாமில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நால்வருக்கே வைரஸ் தொற்றியிருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் தெரியவந்தது.
இதன்படி இலங்கையில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 2 ஆயிரத்து 103 பேர் குணமடைந்துள்ளனர். 654 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 11 பேர் பலியாகியுள்ளனர்.