இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து வருகைதந்து, கொரோனா தடுப்பு முகாமில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நால்வருக்கே வைரஸ் தொற்றியிருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் தெரியவந்தது.

இதன்படி இலங்கையில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 2 ஆயிரத்து 103 பேர் குணமடைந்துள்ளனர். 654 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 11 பேர் பலியாகியுள்ளனர்.

Related Articles

Latest Articles