இலங்கை அடைவதில் மக்கள் உறுதி – 7ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி போராட்டம் இன்று 7ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

தமிழ், சிங்கள புத்தாண்டு தினமான நேற்றும் பெருந்திரளான மக்களின் பங்கேற்போடு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், போராட்டக்களத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

அத்துடன், இந்த போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் நாட்டின் ஏனைய சில பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றன.

Related Articles

Latest Articles