ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில், 25 நாடுகள் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அனுமதி வழங்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இலங்கை தொடர்பான பிரேரணைக்கு எதிராக 11 நாடுகள் வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன்படி 25 நாடுகளின் ஆதரவை மேற்குல நாடுகளால் பெறமுடியாமல்போனது.
பிரேரணைக்கு 22 நாடுகளே ஆதரவு வழங்கின. ஆக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அடிப்படையற்றது. தனக்கான அதிகார எல்லைக்கு அப்பால் சென்று அது செயற்படுகின்றது.” – என்றார்.
