இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி விழாவும், மலையகம் 200 மாபெரும் விருது வழங்கும் நிகழ்வும் நாளை 23 ஆம் திகதி கொட்டகலை ரிசிகசி கலாசர மண்டபத்தில் காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதாக ஒன்றியத்தின் ஸ்தாபகரும் பொதுச்செயலாளருமான சிவஸ்ரீ சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.
குறித்த நிகழ்வு பாரத தேசத்தின் தமிழ் நாடு திருகைலாய ஸ்ரீ கந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் திருமுறைக் கலாநிதி ஸ்ரீலஸ்ரீ சிவாக்கர தேசிக சுவாமிகள் முன்னிலையில் இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் ஸ்தாபகரும், பொதுச்செயலாளருமான சிவஸ்ரீ சுரேஸ்வர சர்மா தலைமையில் ஆரம்பமாகவுள்ளன.
இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசர அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநநாயக்க, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் பிரதம அழைப்பாளர்களாகவும், கனடா வோல் எக்ஸன் பவுன்டேசன் ஸ்தாபகர் சுபாஸ் சுந்தரராஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமய தலைவர்கள், இந்து ஆலயங்களின் குருக்கள், அறநெறி ஆசிரியர்கள்,சமூக சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள் அறிவிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
மலைவாஞ்ஞன்