இளவரசரின் கனவு ஐஸ்லாந்தில் கலைந்துவிட்டது!

 

நுகேகொடை கூட்டத்துக்கு அரசாங்கம் எவ்வித இடையூறும் செய்யவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.

நுகேகொடை கூட்டத்தை குழப்புவதற்கு ஆளுங்கட்சி சதி செய்ததாக கூட்டு எதிரணி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஆளுங்கட்சி எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

“ கனவு இளவரசின் கனவானது ஐஸ்லாந்தில் மீண்டும் கலைந்துள்ளது என்பதையே நுகேகொடை கூட்டம் வெளிப்படுத்தியது.

ரணில், மஹிந்த போன்றவர்களை மக்கள் விரட்டியடித்தனர். எனவே, அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்தவர்களுக்கு மீள உயிர்கொடுக்க முடியாது.” எனவும் தேவானந்த சுரவீர குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles