இஸ்ரேலிய இராணுவத்தின் அடுத்த இலக்கு என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது இஸ்ரேல் இராணுவம் கான் யூனிஸில் பணியை முடித்த பிறகு விரைவில் ரஃபா எல்லையை அடைந்து, அதன் எல்லைப் பகுதிகளில் உள்ள ஹமாஸ் பிரிவுகளை அழிக்கும். இந்த நடவடிக்கைகள் பயங்கரவாதக் குழுவின் போரி டும் திறனை கடுமையாக பலவீனப்படுத்தும்.” என குறிப் பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதலில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 105 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.
மேலும், இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக் கப்பட்ட ரபா நகருக்கு சுமார் 1.9 மில்லியன் பலஸ்த்தீனி யர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பானது, சர்வதேச நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பேசுபொருளாகவும் மாறியுள்ளது.