இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கையர்களின் நிலைவரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சபையில் இன்று வெளியிட்ட கருத்துகளின் சுருக்கம் வருமாறு,
🛑 ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உக்கிர தாக்குதல்: இலங்கை தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்…!
🛑 ஈரானின் வடக்கு பிரதேசத்தில் இருந்து தற்காலிக தூதரக சேவையை வழங்க திட்டம்…!
🛑 இஸ்ரேலில் 20 ஆயிரம் இலங்கையர்கள்: ஈரானில் 35 பேர் மட்டுமே…!
🛑 ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் தொழில்புரியும் 4 இலங்கையர்களுக்கு காயம்…!
🛑 இஸ்ரேலுக்கு தொழிலுக்கு செல்வது தற்காலிகமாக நிறுத்தம்…
🛑 விடுமுறையில் வந்துள்ளவர்களுக்கு விசா கால நீடிப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை…
🛑 போர் சூழ்நிலையில் விமானம் அனுப்பி இலங்கையர்களை மீட்பது கடினம்: தரை வழி பயணம் ஊடாகவே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
🛑 போர் நிலைமை மேலும் மோசமடைந்தால் இலங்கையர்களை மீட்பதற்காக ஏனைய நாடுகளுடனும் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது.
-வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் – நாடாளுமன்றத்தில் இன்று (17.06.2025) தகவல்