இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
இ.தொ.காவின் ஸ்தாபத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி 107ஆவது ஜனன தினம் இன்றாகும். அத்தினம் அனுஷ்டிக்கப்பட்ட பின்னர் இ.தொ.காவின் தேசிய சபைகூடி சமகால அரசியல் நிலைவரங்கள், தலைவர் தேர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் என முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது.
எனினும், இன்றைய தினம் தேசிய சபைக்கூடாது எனவும், பிரிதொரு நாளிலேயே அது நடைபெறும் எனவும் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.