இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.










