இலங்கை போக்குவரத்து சபைக்கு 520 சாரதிகள் மற்றும் 170 நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இ.போ.ச.வின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் வெற்றிடங்கள் காரணமாக பஸ் சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக குறிப்பிட்ட சில வழித்தடங்களில் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.