ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு செயலாளர் லாரிஜானி உயிரிழந்தது குறித்த தகவல் தனக்கு கிடைத்துள்ளதாக காட்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த தகவலை ஈரான் தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா காமேனியின் நம்பிக்கைக்குரிய நபரான லாரிஜானி, தற்போது உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளராக உள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானை வழிநடத்துவதில் முக்கியத் தலைவராக அலி லாரிஜானி செயல்பட்டு வருகிறார். இதனால், அவர் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வந்தார்.
மேலும், இந்தத் தாக்குதலில் ஈரான் புரட்சிகரப் படையின் முழுத் தன்னார்வப் பிரிவான ‘பசிஜ்’ (Basij) படையின் தலைவர் குலாம் ரெஸா சுலைமானியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.










