உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்திற்கு இன்று (22) அனுப்பப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டமையினால் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை முன்னர் திட்டமிட்டபடி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.