உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 3 சி.ஐ.டி. குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரமே இக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இன்று மாலை பாரிய தீ பரவியிருந்தது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன் வழக்குகளுடன் தொடர்புடைய எந்தவொரு ஆவணமும் தீக்கிரையாகவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் கழிவுப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பகுதியிலேயே தீ பரவியுள்ளது.