மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காயமடைந்துள்ள கைதிகளுள் 40 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, மஹர சிறைச்சாலை கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், உள்ளக விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.