உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – உண்மை கண்டறியப்பட வேண்டும்! சஜித் வலியுறுத்து

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும்,அது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரேரணையாக இந்த விவாதம் முன்வைக்கப்பட்டது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவறுக்கும் சேறு பூசவோ அவமதிக்கவோ அல்லவெனவும், இதன் முக்கிய நோக்கமும் குறிக்கோளும் உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்வதாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் இன்று(22) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செனல் 4 வில் வெளியான காணொளி ஒன்றினால்தான் இது பேசு பொருளாகியதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் கூறினாலும் அவ்வாறு சொல்பவர்கள் இது சம்பந்தமாக எந்த யோசனையும் இல்லாத தூக்கத்தில் இருக்கும் எம்.பி.க்களே என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் உண்மை மற்றும் இதன் பிரதான சூத்திரதாரிகள் குறித்து முழு நாடும் விழிப்புடன் இருந்து வருவதாகவும்,இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் விழிப்புடன் இருந்து பேசி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்க குடியரசு செப்டம்பர் 11,2001 அன்று நடந்த தாக்குதல் குறித்து ஒரு ஆணைக்குழு அறிக்கையை தயார் செய்தாலும், எதிர்க்கட்சித் தலைவராக தான் அமெரிக்கக் குடிமகன் இல்லை என்றாலும் அந்த அறிக்கை தற்போது தம் வசம் உள்ளதாகவும்,இலங்கைப் போன்று பொய்யான நிபந்தனைகளை முன்வைத்து அறிக்கைகளை மறைக்கவில்லை என்றும், பாரபட்சமற்ற விசாரணையை முன்னெடுத்ததாகவும்,கட்சி பேதமின்றி அவர்கள் ஆணைக்குழுவில் பணியாற்றியதால் உண்மையை கண்டறிய முடிந்ததாகவும், நீண்ட கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

9/11 தாக்குதலில் இருந்து அமெரிக்கா பாடம் கற்றுக் கொண்டாலும்,நம் நாட்டு தலைவர்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles