உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ

இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி உற்பத்தியாளரான கரிஸ்ப்ரோ அறிமுகப்படுத்திய Crysbro Next Champ புலமைப்பரிசிலைப் பெற்ற தருஷி கருணாரத்ன இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கென்யாவின் நைரோபியில் நடைபெறவுள்ள உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் பெற்ற இந்த வெற்றிக்கு கேரிஸ்ப்ரோ தருஷிக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

800 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 வயது பள்ளி மாணவி தாருஷி கருணாரத்ன தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் 2.07 நிமிடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

அவர் ஓடி முடிக்க எடுத்த நிமிடங்களுக்கு அமைய இந்தப் போட்டித் தொடரில் உலக அளவில் 6வது இடத்தையும், 18 வயதுக்குட்பட்டவர்களில் ஆசியாவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

கண்டி மெனிக்ஹின்ன வலையம் ஏ ரத்நாயக்க வித்தியாலயத்தின் மாணவியான தருஷி சிறு வயதிலிருந்தே விளையாட்டுக்காக விசேட திறமைகள் பலவற்றை வெளிக்காட்டியதுடன் 400 மீற்றர் மற்றும் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் அகில இலங்கை பாடசாலைகளுக்கான போட்டிகள் மற்றும் ஸ்ரீமத் ஜோன் டாபட் தடகள போட்டிகளில் 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் சாதனையாக 2.14 நிமிடங்களிலும் மற்றும் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் 56.54 நிமிடங்களிலும் ஓடி வெற்றிபெற்ற வீராங்கனையாவார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கிரிஸ்புரோ குழுமத்தின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரெஸ் செல்லர், ‘உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவி தருஷி கருணாரத்ன இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்த நிகழ்வில் அவர் ஒரு சர்வதேச பதக்கத்தை வெல்வார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அவர் க்ரிஸ்ப்ரோ Crysbro Next Champ புலமைப்பரிசில் திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார், மேலும் இந்த தேசிய திட்டத்தின் செயல்திறனைப் பிரதிபலிப்பதில் அவர் பெற்ற வெற்றி இலங்கையில் விளையாட்டுத் துறையில் எதிர்கால ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் சாம்பியனாக மாறுவதற்கான அவரது உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.

இளம் இலங்கையர்களின் எதிர்கால விளையாட்டுத் திறனைப் பாதுகாக்க இந்த உதவித்தொகை திட்டத்தில் கிரிஸ்புரோ ஒரு பெரிய முதலீடு செய்துள்ளது. ‘NOCSL-CRYSBRO Next Champ’ புலமைப்பரிசில் திட்டத்தினால் இலங்கையில் நன்மை அடைந்துள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தருஷி ஒரு சிறந்த முன்மாதிரி வைத்துள்ளார்.’ என தெரிவித்தார்.

Crysbro Next Champ புலமைப்பரிசில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தேசிய அளவில் திறமையான 130 பள்ளி மாணவர்களுக்கு சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல பயிற்சி, ஊட்டச்சத்து, மருத்துவம், போக்குவரத்து மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகிறது. Crysbro Next Champ புலமைப்பரிசில் திட்டத்தின் முதல் கட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து விளையாட்டு வீரர்களை மதிப்பீடு செய்து அறிமுகப்படுத்துவதோடு, அவர்களுக்கு புதிய பயிற்சி உத்திகள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. அனைத்து கிரிஸ்புரோ சமூக பொறுப்புணர்வு திட்டங்களும் கிராமப்புற குழந்தைகளின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு உதவுகின்றன, மேலும் Next Champ திட்டம் கிராமப்புற குழந்தைகளின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அவற்றை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லவும் செயல்பட்டு வருகிறது.

இலங்கையின் விளையாட்டு நடவடிக்கைகளுக்கான முதன்மையான சங்கமான இலங்கையின் தேசிய ஒலிம்பிக் கமிட்;டி, சர்வதேச போட்டிகளை ஒருங்கிணைப்பதற்காக இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்பாகும். இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவும் இலங்கை விளையாட்டு வீரர்களை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதற்கு தேவையான செயல்திறன் நிலைக்கு ஊக்குவிக்கிறது.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும்.

இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும்.

மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles