ஊடகவியலாளர் சந்திரமதி காலமானார்!

இளம் ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேல் இன்று காலை (21) காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக வீட்டில் வைத்தே அவர் காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கண்டி, புஸல்லாவை பிறப்பிடமாகக்கொண்ட சந்திரமதி, புஸல்லாவை இந்து தேசியக் கல்லூரியில் உயர்தரம் வரையிலும் , பட்டப்படிப்பை இந்தியாவிலும் நிறைவுசெய்துள்ளார்.
தினக்குரல் பத்திரிகை ஊடாக தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த அவர், கடந்த 4 வருடங்களாக நியூஸ்பெஸ்ட் ஊடக நிறுவனத்தில் பணியாற்றினார்.
அவரின் ஆன்மா இறைப்பாறட்டும்.

Related Articles

Latest Articles