ஊடக சுதந்திரத்தில் ஒருபோதும் கைவைக்கமாட்டோம்

ஊடக சுதந்திரத்தில் ஒருபோதும் கைவைக்கமாட்டோம் என உறுதியளித்துள்ளார் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

ஊடக சுதந்திரத்தில் நாம் கைவைக்கமாட்டோம். எமது ஆட்சியில் ஊடகவியலாளர்களுக்கு கடுகளவேனும் பாதிப்பு ஏற்படாது. ஜனநாயகம் மற்றும் கருத்து சுத்திரத்தை பாதுகாப்பதும் மக்கள் எமக்கு வழங்கிய ஆணைகளுள் ஒன்றாகும். ஆதனை நாம் பாதுகாப்போம்.

ஊடகம் என்பது வேறு, ஊடகத்தை வைத்து அரசியல் செய்யும் தரப்பு என்பது வேறு. அவ்வாறு செயற்படும் சில ஊடகங்கள் உள்ளன. அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் குற்றம்சாட்டிய ஊடகத்தின் பிரதான அரசியலுடன் தொடர்புபட்டவர். அவர் கடந்தகாலங்களில் எவ்வாறு செயற்பட்டார் என்பது மக்களுக்கு தெரியும்.

நாடு தற்போது சுவாசிக்க தொடங்கியுள்ளது. எனவே, மக்கள் மனங்களை மாற்றும் நோக்கி திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடக்கூடாது. அவ்வாறு செய்வது துரோகச்செயலாகும்.” -என்றார்.

Related Articles

Latest Articles