ஊரடங்கில் அடங்கமறுத்த 64 பேர் கைது!

ஊரடங்கு உத்தரவைமீறிய 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திவுலப்பிட்டிய, மினுவாங்கொட மற்றும் வெயாங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நேற்று முன்தினம் முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று இரவு முதல் நேற்று இரவு வரையே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

Related Articles

Latest Articles