நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் சட்டவிரோதமான முறையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மதுபானம் விற்பனை செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நோர்வூட், பிளக்போனி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
