ஊழல், மோசடி தடுப்பு நடவடிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் ஈடுபடாமை கவலையளிக்கின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
வெளிநாடு சென்றிருந்த ரஞ்சன் ராமநாயக்க இன்று காலை நாடு திரும்பினார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் ,
” எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசையென வரிசை யுகத்துக்கு ஜனாதிபதி முடிவு கட்டியதை வரவேற்கின்றேன். நாடு வழமைக்கு திரும்பிவருகின்றது. ஐஎம்எப் கடன் கிடைத்தமை குறித்தும் மகிழ்ச்சி.
ஆனால் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபடவில்லை. கப்பத்துக்காக முதலீட்டாளர்கள் தாக்கப்படுகின்றனர். மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்ட அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவரவில்லை. எனவே, ஜனாதிபதி ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அவர் அது பற்றி கதைக்காதது கவலையளிக்கின்றது.” எனவும் ரஞ்சன் குறிப்பிட்டார்.
