” நாட்டில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி தயார்.” – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
” தேர்தல் நாட்காட்டியின் பிரகாரம் தற்போது உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அடுத்தது ஜனாதிபதி தேர்தல். ஆனால் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேசிய மக்கள் சக்தியில் இருக்கின்றார். அநுர சக்திவாய்ந்த, சிறந்த தலைவர்.” எனவும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.










