‘எந்த சூழ்நிலையிலும் இதொகாவின் மக்கள் சேவை கைவிடப்படமாட்டாது. மக்களுக்கான எமது சேவை தொடரும்.” – என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உலர் உணவு பொருட்களையும் வழங்கி வைத்தார்.
இதில் இரண்டாவது நாளாக நேற்றும் நுவரெலியா மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான சமர்வில், எஸ்கடேல், ஹைபொரஸ்ட்-அல்மா ஆகிய பகுதி மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான தேவையான ஏற்பாடுகளை செய்துக் கொடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதோடு, தொடர்ந்தும் மக்களுக்கான சேவைகள் தடைபடாது இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
இதன்போது நுவரெலியா இ.தொ.கா காரியாலய உத்தியோகஸ்த்தர்களான ராஜாராம், காசிராஜ், கந்தப்பளை இ.தொ.கா இளைஞர் அணி சிரேஸ்ட அமைப்பாளர் ரமேஸ்குமார் உள்ளிட்டவர்களும் பொதுச்செயலாளருடன் சென்றிருந்தனர்.










