எனது மகளுக்கு நடந்த கொடூரத்துக்கு நீதி வேண்டும்!
” என்னுடைய மகளுக்கு இவ்வுலகில் நியாயம் கிடைக்கவில்லை. இந்த சமூகத்தையும் வெறுத்துதான் அவர் இந்த முடிவை எடுத்தாள். தனக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கிடைக்கவில்லையே என அம்மா, அப்பாவையே அவர் வெறுத்தார்.
பாடசாலை மாற்றப்பட்டதால் அவர் வருத்தப்பட்டார். தனக்கு இந்நிலை ஏற்பட காரணமானவர்களுக்கு எவ்வித தண்டனையும் கிடைக்கவில்லை என்பதாலும் அவர் கவலையில் இருந்தார்.
எனது மகளுக்கு நடந்ததுபோல வேறு எவருக்கும் நடக்ககூடாது. எந்த பெண்ணுக்கும் இப்படி நடக்கவே கூடாது. எனது மகளின் மரணம் முற்றுபுள்ளியாக இருக்ககூடாது. நியாயம் கிடைக்க வேண்டும்.”
இவ்வாறு மாணவி டில்ஷி அம்ஷிகாவின் தாயார் கண்ணீர்மல்க தெரிவித்தார்.