இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இராசயானப் பொருள் பற்றாக்குறையை தொடர்ந்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.

காலபோக விதைப்பு தொடங்கியுள்ள நிலையில் உழவர்களின் உரப்பிரச்சினையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் எம். ஏ. சுமந்திரன் கிளிநொச்சி கண்டாவளை உள்ள தன் பூர்விக வயலை சம்பிரதாய பூர்வமாக உழுது, விதை விதைத்திருந்தார். இப் பிரச்சினை குறித்து விவசாயிகள் சார்பில் சுமந்திரன் தொடர்ந்து குரலெழுப்புவார்.












