எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடாளுமன்ற அமர்வு அடுத்த வாரமும் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 4,5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான குழுக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.