சமையலறையில் காணப்படும் பருப்பு வகைகள் நமது அழகுக்கான சிறந்த
சரும பராமரிப்புப் பொருட்களாக உபயோகிக்கலாம். பயறு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, மைசூர் பருப்புபோன்ற பல பருப்பு வகைகள் பல தோல் பிரச்சினைகளை இயற்கையாக குணப்படுத்தப்படுத்துகின்றன.
இன்று, நாம் மைசூர் பருப்பு பேஸ் பேக் மற்றும் அவற்றின் பயன்பாடுகளைப்
பற்றி பார்ப்போம்.
நீங்கள் மைசூர் பருப்பை அரைத்து, இறுக்கமான கொள்கலனில் போட்டு
உலர்ந்த இடத்தில் வைத்து பயன் படுத்தலாம்.
ஒரு பிடி மைசூர் பருப்பை பாத்திரம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
காலையில் மிக்ஸியில் நன்கு பேஸ்ட் போன்று அரைக்க வேண்டும் பின்பு
அதனுடன் 1/3 கப் பாலை சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும் .
முகத்தில் இந்த பேஸ்ட்டை வட்ட இயக்கத்தில் தடவி கொள்ளவும்.
20 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.
தினசரி பேஸ் வோஷ்
1 மேசைக்கரண்டி மைசூர் பருப்பு , 2 மேசைக்கரண்டி பால் , மஞ்சள் ஒரு சிட்டிகை,
தேங்காய் எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து பேஸ்ட் செய்து
முகத்தில் பூசி 2 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.