இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியல் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடறப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு படகுகளும் பைப்பற்றப்பட்டுள்ளன.
எல்லை தாண்டி யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த குற்றத்திற்காக கைதாகிய இந்திய மீனவர்கள் 14பேரையும், இன்று (7) நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் யாழ் பண்ணையில் உள்ள நீரியல்வளத் திணைக்கள
அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, ஊற்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மூன்று படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்துடன் 14 மீனவர்கள் கைது செய்துள்ளனர்.
இதே வேளை மன்னார் கடற்ப்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் ஒரு படகையும் கைப்பற்றியுள்ளனர்.