2024 ஏப்ரல் மாதத்துக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என தான் உறுதியாக நம்புகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ரணில் விக்கிரமசிங்கவை பற்றி எமக்கு நன்கு தெரியும். அவர் ஆய்வின் அடிப்படையில் அரசியல் நடத்துபவர். ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி முற்பகுதியில் அவருக்கு கிடைக்கப்பெறும் ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலே ஏப்ரல் மாதத்துக்குள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
எந்த தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தியைதவிர மாற்று கூட்டணியொன்று இல்லை.” – என்றார்.