ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியில் இணையமாட்டார்கள் என்று சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர நம்பிக்கை வெளியிட்டார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள்மீது அதிருப்தியில் இருக்கும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளனர் எனவும் அதற்கான பேச்சுகள் நடைபெற்றுவருகின்றன எனவும் நாளை நடைபெறவுள்ள சு.கவின் மத்தியகுழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் வினவியபோதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறினார்.
” கூட்டணிக்குள் பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். இவை தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படும். எனினும் ,சஜித் அணியுடன் இணையும் எண்ணம் இல்லை. அதற்கு நாம் என்றும் தயாரில்லை.” என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
