ஐசிசி இந்தியாவின் சொத்தாக மாறியுள்ளது – விமல் சீற்றம்

” ஐசிசி (சர்வதேச கிரிக்கெட்சபை) என்பது இந்தியாவின் சொத்தாக மாறியுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையையும், தெரிவுக்குழுவையும் இந்தியாதான் நிர்வகிக்கின்றது.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

” உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுடனான ஆட்டத்தில்,  நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்றும் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணி எதற்காக இந்தியாவுக்கு வழங்கியது? மஹேல ஜயவர்தனதான் அவ்வாறு செய்யுமாறு கூறினார். இதன் பின்னணி என்ன? இவை பற்றியும் ஆராய வேண்டும்.” எனவும் விமல் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles