இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (17) மீள ஆரம்பமாகவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.